Sunday, January 5, 2020

'டான்செட்' நுழைவு தேர்வு: விண்ணப்ப பதிவு நாளை துவக்கம்



எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான, 'டான்செட்' நுழைவு தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப பதிவு, நாளை துவங்குகிறது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள்; கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின்கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு பல்கலைகளில், முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற தமிழக அரசின் பொது நுழைவு தேர்வில், பட்டதாரிகள் தேர்ச்சி பெற வேண்டும். எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர, இந்த நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை வழியே, டான்செட் தேர்வு நடத்தப்படுகிறது.வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, பிப்ரவரி, 29 மற்றும் மார்ச், 1ல் டான்செட் நுழைவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நாளை துவங்குகிறது.

பதிவுக்கான அவகாசம், ஜனவரி, 31ல் முடிகிறது. மேலும் விபரங்களை, அண்ணா பல்கலையின், https://tancet.annauniv.edu/tancet/ என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.